Popular Posts

Powered by Blogger.

அம்மாவுக்கு ஆதரவாக தமிழ் திரைப்படத்துறையினர் நாளை அமைதிப் போராட்டம்



கடந்த சனிக்கிழமை சொத்துக்குவிப்பு வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் அம்மாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததையடுத்து வழக்கமான தமிழ்நாடாக இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த தீர்ப்பு பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழ் திரைப்படத்துறையை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருட்டு விசிடி சம்பந்தமாக விரைவில் அம்மாவை சந்திக்க இருந்த தமிழ் திரைப்படத்துறையினருக்கு இப்படி ஒரு முட்டுக்கட்டையாக இந்த தீர்ப்பு வந்திருக்கிறது.

மேலும் அம்மாவுக்கு ஆதரவாக நாளை தமிழ் திரைப்படத்துறையினர் சென்னை சேப்பாக்கத்தில் அமைதி போராட்டம் நடத்தவுள்ளனர். இதனால் தமிழ் சினிமாவில் நாளை எந்த ஷூட்டிங்கும், நிகழ்ச்சிகளும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் நாளை எந்த திரையரங்கிலும் காட்சிகள் திரையிடப்படாது என்றும் அறிவித்திருக்கிறார்கள். இந்த போராட்டத்திற்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், ஃபெப்சி சங்கம், பி.ஆர்.ஓ.யூனியன் சங்கம் ஆகிய சங்கள் ஆதரவு அளிக்கின்றன.
< >
    Blogger Comment
    Facebook Comment

Get Update Article on FacebookX

Find Us on Facebook

Get Update Article on Google+X

Follow Us on Google+